லாரி டிரைவரை கொலை செய்து விட்டு 9 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் கைது

வேலூர், ஜூலை 31: லாரி டிரைவர் கொலை செய்து விட்டு 9 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவரை போலீசார் கைது செய்தனர். சென்னை பூந்தமல்லி பகுதியைச் சேர்ந்த முருகேசன், லாரி டிரைவர். இவர் கடந்த 2014ம் ஆண்டு சென்னை- பெங்களூரு தேசிய ெநடுஞ்சாலையில் வேலூர் அன்பூண்டி அருகே துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டார். அவரிடம் இருந்து ₹60 ஆயிரம் மற்றும் லோடுடன் லாரியை கடத்தி சென்றதாக விரிஞ்சிபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, 5 பேரை கைது செய்தனர்.

இதில், ஜாமீனில் வெளிய வந்த சென்னை சூளைமேடு பகுதியைச் சேர்ந்த ராஜா என்பவர் கடந்த 9 ஆண்டுகளாக நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தார். இந்நிலையில், எஸ்பி மணிவண்ணன் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாத நபர்களை பிடிக்க உத்தரவிட்டார். இதையடுத்து, வேலூர் தாலுகா இன்ஸ்பெக்டர் சுபா மற்றும் போலீசார் சென்ைன பட்டினபாக்கம் பகுதியில் தலைமறைவாக இருந்த ராஜா என்பவரை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி வேலூர் சிறையில் அடைத்தனர்.

Related posts

ஆடுகளை வேட்டையாடும் தெரு நாய்களை கட்டுப்படுத்தக்கோரி போராட்டம்

பண மோசடி புகார் தெரிவிக்க பொருளாதார குற்றப்பிரிவு அறிக்கை

அமராவதி பழைய, புதிய ஆயக்கட்டு பாசனத்துக்கு இன்று தண்ணீர் திறப்பு