லாரி கவிழ்ந்து டிரைவர் காயம்

ஊத்தங்கரை, ஆக.9: ஊத்தங்கரை-சேலம் சாலையில் வெப்பாலம்பட்டி அருகே நேற்று அதிகாலை ஆந்திரா மாநிலத்தில் இருந்து கோயவைக்கு பழைய பேப்பர் லோடு ஏற்றிக்கொண்டு லாரி சென்றது. திடீரென கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், லாரி டிரைவரான ஓமலூர் பகுதியை சேர்ந்த பிரபு(38) என்பவர் காயங்களுடன் உயிர்தப்பினார். அவ்வழியாக சென்ற மக்கள் அவரை மீட்டு ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதபற்றி தகவலறிந்த ஊத்தங்கரை போலீசார் விபத்தில் சிக்கிய லாரியை மீட்டனர். தொடர்ந்து லாரியில் இருந்த பொருட்களை மாற்று வாகனத்தில் ஏற்றி அதன் உரிமையாளர்கள் அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

Related posts

ஆசிரியர்கள் கலந்தாய்வுக்கு எதிராக நடத்தும் போராட்டத்தில் பங்கேற்க மாட்டோம் பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு அறிவிப்பு

கஞ்சா விற்றவர் கைது

முப்பெரும் சட்டங்களை அமல்படுத்த எதிர்ப்பு திருச்சியில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்