லஷ்கர் தீவிரவாதி சுட்டுக்கொலை

ஸ்ரீநகர்: ஜம்முவில் லஷ்கர் தீவிரவாத அமைப்பை சேர்ந்தவன் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டான். ஜம்மு காஷ்மீரின் ஹர்வான் பகுதியில் தீவிரவாதி பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து பாதுகாப்பு படையினர் அங்கு விரைந்தனர். அப்போது பதுங்கி இருந்த  தீவிரவாதி திடீரென துப்பாக்கியால் தாக்குதல் நடத்தினான். இதனை தொடர்ந்து வீரர்கள் நடத்திய பதிலடியில் தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான். இவன், பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர் தீவிரவாத அமைப்பை சேர்ந்த சைபுல்லா என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. இவன் ஸ்ரீநகரில் அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் நடவடிக்கைகள் மற்றும் பொதுமக்களை சுட்டுக்கொன்ற சம்பவத்தில் தொடர்புடையவன் என காஷ்மீர் போலீசார் தெரிவித்துள்ளனர்….

Related posts

பாஜக மூத்த தலைவர் அத்வானி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

தாயகம் வந்தது இந்திய கிரிக்கெட் அணி

கங்கனா ரனாவத்தை கன்னத்தில் அறைந்து சஸ்பென்ட் ஆன சிஐஎஸ்எப் காவலர் பெங்களூருவுக்கு பணியிட மாற்றம்