ஸ்ரீநகர்: ஸ்ரீநகரில் பீஷம்பர் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் சிஆர்பிஎப், ஸ்ரீநகர் போலீசார் தேடுதல் வேட்டையில் இறங்கினர். அப்போது அங்கு மறைந்திருந்த தீவிரவாதிகள் அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். சிஆர்பிஎப் வீரர்களும் போலீசாரும் பதில் தாக்குதல் கொடுத்தனர். இதில், பாகிஸ்தானை சேர்ந்த 2 லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். தீவிரவாதிகள் கையெறிகுண்டுகளை வீசியதில் சிஆர்பிஎப் வீரர், 2 போலீசார் உள்பட மூவர் படுகா யமடைந்தனர். அவர்கள் அருகில் உள்ள 92வது பிரிவு ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர். இதில் சிஆர்பிஎப் வீரர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கொல்லப்பட்ட தீவிரவாதிகள் இருவரும் மைசுமாவில் கடந்த 4ம் தேதி சிஆர்பிஎப் வீரர் கொல்லப்பட்ட தாக்குதலில் தொடர்புடையவர்கள்….