கோவை: கோவை வடக்கு தாசில்தார் கோகிலாமணி கடந்த வாரம் ரூ. 25 ஆயிரம் லஞ்சம் வாங்கியபோது கையும், களவுமாக கைது செய்யப்பட்டார். விசாரணையில் தாசில்தார் பல்வேறு ஆவணங்கள், பட்டா மாறுதல், பொதுமக்களுக்கான நல திட்டங்கள் வழங்க லஞ்சம் வாங்கி வந்தது தெரியவந்தது. மேலும், வடக்கு தாலுகா துணை தாசில்தார் செல்வம் என்பவரும் லஞ்சம் கேட்டு நெருக்கடி தந்துள்ளது தெரிய வந்தது. உடல் நலக்குறைவால் ரெய்டு நாளில் செல்வம் பணிக்கு வரவில்லை. இருப்பினும் செல்வம் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்தனர்….