ரேஷன் கடை விற்பனையாளருக்கு வலை

கிருஷ்ணகிரி, செப்.30: காவேரிப்பட்டணம் அருகே, விவசாயி கொலை வழக்கில் முன்னாள் ராணுவ வீரர் கைது செய்யப்பட்டார். ரேஷன் கடை விற்பனையாளரை போலீசார் தேடி வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே பனகமுட்லு, பில்லகொட்டை பகுதியைச் சேர்ந்த விவசாயி பரந்தாமன்(60). இவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் சம்பத்குமார்(37) என்பவருக்கும், நிலத்தகராறு இருந்து வந்தது. இதுதொடர்பாக கடந்த 23ம் தேதி, மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது, ஆத்திரமடைந்த சம்பத்குமார் மற்றும் அவரது தம்பியும், ரேஷன் கடை விற்பனையாளரருமான சின்னசாமி ஆகியோர் சேர்ந்து, பரந்தாமனை சரமாரியாக தாக்கினர். இதில், படுகாயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்த புகாரின்பேரில், காவேரிப்பட்டணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், பரந்தாமன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக மாற்றிய போலீசார், சம்பத்குமாரை கைது செய்தனர். தலைமறைவான அவரது தம்பி சின்னசாமியை தேடி வருகின்றனர்.

Related posts

ஆசிரியர்கள் கலந்தாய்வுக்கு எதிராக நடத்தும் போராட்டத்தில் பங்கேற்க மாட்டோம் பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு அறிவிப்பு

கஞ்சா விற்றவர் கைது

முப்பெரும் சட்டங்களை அமல்படுத்த எதிர்ப்பு திருச்சியில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்