ரேஷன் அரிசி கடத்த முயன்ற பெண் கைது

அம்பத்தூர்: அம்பத்தூர் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் நேற்று முன்தினம் கொருக்குப்பேட்டையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, குறைந்த விலைக்கு ரேஷன் அரிசி வாங்கி, அவற்றை சிறுசிறு மூட்டைகளாக கட்டி, ரயில் மூலம் ஆந்திராவுக்கு கடத்தி செல்ல தயார் நிலையில் இருப்பது போலீசாருக்கு தெரியவந்தது. தொடர்ந்து, அங்கு ரேஷன் அரிசி மூட்டைகளை ரயிலில் கடத்த முயன்ற பெண்ணை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த ருக்மணி(53) என தெரியவந்தது. அவரை கைது செய்து 1200 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்தனர்….

Related posts

ஈரோடு அருகே கைத்தறி சேலை விற்பனை கடையில் 25 சவரன் நகை கொள்ளை!!

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே குப்பைத் தொட்டியில் பதுக்கி மது விற்ற 2 பேர் கைது!!

பாஜக நிர்வாகி காலாவதியான மருந்து விற்றதாக வழக்கு..!!