Friday, August 2, 2024
Home » ரேஷன் அரிசி கடத்தலில் பறிமுதல் செய்த வாகனங்கள் ஏலம்

ரேஷன் அரிசி கடத்தலில் பறிமுதல் செய்த வாகனங்கள் ஏலம்

by Ranjith

 

கோவை, நவ. 11: குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை காவல்துறை தலைவர் ஜோசி நிர்மல் குமார், பொதுவிநியோக திட்ட ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பான வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை விரைந்து தீர்வு காண உத்தரவிட்டார். இதையடுத்து, கோவை குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை சார்பில் அரிசி கடத்தல் வழக்குகளில் கோவை சரகத்தில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை மாவட்ட கலெக்டர் மற்றும் டிஆர்ஓ ஆகியோரின் உதவியுடன் ஏலம் விடப்பட்டது.

இதில், பொள்ளாச்சியில் 118 வாகனங்கள், கோவையில் 40 வாகனங்கள் என மொத்தம் 158 வாகனங்கள் மின்னணு ஏலம் விடப்பட்டு ரூ.30 லட்சத்து 33 ஆயிரத்து 580 அரசுக்கு அளிக்கப்பட்டது. தவிர, பொள்ளாச்சியில் 48 வாகனங்களும், கோவையில் 48 வாகனங்குளம் ஏலம் விடப்பட்டன. இதற்கான பணத்தை ஏலம் எடுத்தவர்கள் கட்டியவுடன் சம்மந்தப்பட்ட வாகனங்கள் இந்த மாதத்திற்குள் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.

You may also like

Leave a Comment

six + three =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi