ரேசன் அரிசி மூட்டைகள் பறிமுதல்

தொண்டி, ஜூலை 4: தொண்டி பகுதிகளில் நியாய விலை கடை தணிக்கைக்கு நேற்று முன்தினம் திருவாடானை வட்ட வழங்கல் அலுவலர் சிவசண்முகம் மற்றும் அமுதன் சென்று கொண்டிருந்தனர். அப்போது தொண்டி தெற்கு தெருவில் 25 கிலோ கொண்ட 35 பிளாஸ்டிக் பைகளும், 50 கிலோ உள்ள 8 உரசாக்கு மூட்டைகளும் ரோட்டில் கிடந்தது.

இந்த மூட்டைகளில் பொது விநியோகத் திட்ட அரிசி இருப்பது கண்டறியப்பட்டு அக்கம் பக்கத்தில் பொதுமக்களிடம் விசாரணை செய்ததில், யாருடையது என்று தெரியவில்லை. அரிசி மூட்டைகளை கைப்பற்றி திருவாடனை நுகர்பொருள் வாணிப கழகத்தில் ஒப்படைத்தனர்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை