ரெட்டியார்சத்திரம் சில்வார்பட்டியில் அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி

திண்டுக்கல், ஜூலை 2: தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை பொதுமக்கள் அறிந்து கொண்டு பயன்பெறும் வகையில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில், தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படகண்காட்சி மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, ரெட்டியார்சத்திரம் ஒன்றியம், சில்வார்பட்டி ஊராட்சி பகுதியில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி நடைபெற்றது. தமிழ்நாடு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பின் தமிழக மக்களின் வாழ்வில் புது ஒளியை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில், தமிழக அரசு சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் மக்களை தேடி மருத்துவம், இல்லம் தேடி கல்வி திட்டம், மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்கள், கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம், உயர்த்தப்பட்ட மகப்பேறு நிதியுதவி திட்டம், கர்ப்பிணி பெண்களுக்கான பராமரிப்பு நிதியுதவி திட்டம், சுயஉதவி குழுக்களின் கூட்டுறவு துறை கடன் தள்ளுபடி, 5 பவுன் வரை தங்க நகைக்கடன் தள்ளுபடி திட்டம் ஆகியவை குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் படக்காட்சி காண்பிக்கப்பட்டது.

மேலும், திண்டுக்கல் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர், கலெக்டர் ஆகியோர் மாவட்டத்தின் முன்னேற்றத்திற்காக மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சி பணிகள் தொடர்பாக புகைப்படங்கள் இடம் பெற்று, பொதுமக்கள் பார்த்து எளிதில் அறிந்து கொள்ளும் வகையில் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இக்கண்காட்சியினை சில்வார்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் தனலட்சுமி, துணை தலைவர் நதியா மற்றும் ஏராளமான பொதுமக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டனர்.

Related posts

வெளிநாட்டில் வேலை வள்ளியூர் பிரமுகரிடம் ரூ.10 லட்சம் மோசடி: கேரள முதியவர் கைது

சுரண்டை அரசு கல்லூரியில் சேர விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

ஒன்றிய தொழிலாளர் அமைச்சகம் மூலம் பீடித் தொழிலாளர்கள் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை ஆணையர் தகவல்