ரூ.84 லட்சம் கள்ளநோட்டு பறிமுதல் வழக்கில் சினிமா படத்தயாரிப்பாளர் மகன் உள்பட 2 பேர் கைது

 

துவரங்குறிச்சி: வையம்பட்டி காவல் நிலையத்தில் கடந்த வாரம் 84 லட்சம் ரூபாய் கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்த வழக்கில் மேலும் இருவரை போலீசார் கைது செய்தனர். திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வையம்பட்டி காவல் நிலையத்தில் கடந்த மாதம் 24ம் தேதி 84 லட்சம் ரூபாய் கள்ள நோட்டுகளை போலீசார் பிடித்தனர். இது தொடர்பாக ஏற்கனவே பார்த்தசாரதி, சதீஷ, தங்கவேல், ஆகிய மூவரும் மூன்று பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

அதனை தொடர்ந்து அந்த மூன்று பேரையும் 5 நாள் போலீஸ் காவலில் விசாரித்து வந்த நிலையில் கள்ள நோட்டு வழக்கில் தொடர்புடைய மேலும் இருவரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த சினிமா தயாரிப்பாளர் தாமஸ் மகன் வினேஜ் தாமஸ் (42), மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரை சேர்ந்த ராதா கிருஷ்ணன் மகன் குமரவேல் (44) ஆகிய இருவரையும் கைது செய்து மணப்பாறை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

Related posts

அலங்காநல்லூர் அருகே மண் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி பலி

சமயநல்லூர் அருகே சரக்கு வேன் மோதி வாலிபர் பலி

விபத்தின்றி பணியாற்றிய டிரைவருக்கு தங்க பதக்கம்