ரூ.36 கோடி கஞ்சா தீயிட்டு அழிப்பு: போதைப்பொருள் ஒழிப்பு போலீசார் நடவடிக்கை

செங்கல்பட்டு: தமிழகம் முழுவதும் நடத்தப்பட்ட போதை பொருட்கள் சோதனையில், பல மாவட்டங்களிலும், கஞ்சா உள்பட போதை பொருட்களை போதை பொருள் ஒழிப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். அதனை, நீதிமன்றத்தில் ஒப்படைத்து, வழக்கு முடிவடைந்த பின்னர், கஞ்சா உள்பட போதைப் பொருட்களை, செங்கல்பட்டு அருகே போதை பொருள் ஒழிப்புப் பிரிவு போலீசார் தீயிட்டு எரித்து அழித்தனர். இதற்காக, சிங்கப்பெருமாள்கோயில் அருகே தென்மேல்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள மருத்துவ மற்றும் போதை பொருட்கள் எரியூட்டும் தொழிற்சாலையில் உள்ள பாய்லரில், அதனை கொட்டி எரித்தனர். அதில் 3 பகுதிகளாக பிரித்து, சுமார் 9 டன் மதிப்புள்ள போதைப் பொருட்கள் எரிக்கப்பட்டன. போதைப்பொருள் தடுப்புப் பிரிவு எஸ்பி ரோஹித்நாதன் ராஜகோபால், கூடுதல் எஸ்பி தாமஸ் பிரபாகர் ஆகியோர் முன்னிலையில் போலீசார் தீயில் கொட்டி எரித்தனர். எரிக்கப்பட்ட போதை பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.36  கோடி என கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் கூறுகையில், சென்னை, சென்னை புறநகர், மதுரை, கன்னியாகுமரி, பெரம்பலூர், அரியலூர், திருச்சி உள்பட பல்வேறு மாவட்டங்களில் சுமார் 90 வழக்குகளில் தொடர்புடைய போதை பொருட்கள் எரியூட்டப்பட்டது. கஞ்சா செடி வளர்த்து கைதானவர்களிடம் இருந்து பறிமுதல் செய்த கஞ்சா செடியின் பாகங்கள், பல கோடி மதிப்புள்ள கஞ்சா, போதை மாத்திரைகள் உள்பட போதை பொருட்கள் அனைத்தும் நீதிமன்றத்தில் ஒப்படைத்து, நீதிமன்றத்தின் உத்தரவின்படி தீயிட்டு அழிக்கப்பட்டன. கடந்த 2019ம் ஆண்டுக்கு பிறகு இப்போதுதான் தொழிற்சாலையில் போதை பொருட்கள்  எரித்து அழிக்கப்பட்டன. கடந்த சில ஆண்டுகளில் இதுவே அதிகம் எரிக்கப்பட்டதாகும் என்றனர்.    …

Related posts

9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி தீவிரம்

அதிகாரிகள் முறையாக கண்காணிப்பதில்லை 100 நாள் வேலை திட்டம் கொள்ளையடிக்கும் திட்டம்: நீதிபதிகள் காட்டம்

திருச்சியில் ரூ.315 கோடியில் டைடல் பூங்காவுக்கு டெண்டர்:18 மாதத்தில் கட்டி முடிக்க திட்டம், 5 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு