ரூ.2.90 லட்சம் நகை பணம் கொள்ளை

நெல்லை,அக்.31: மூன்றடைப்பு அருகே சலூன் கடைக்காரர் வீட்டை உடைத்து ரூ.2.90 லட்சம் நகை பணம் கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். மூன்றடைப்பு அருகே உள்ள தெற்கு இளையாமுத்தூர், பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ் (41). இவர், மூன்றடைப்பு பஜாரில் சலூன் கடை வைத்துள்ளார். மேலும் கடை அருகே வாடகை வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். கடந்த 27ஆம் தேதி அவரது பூர்வீக வீடான இளையாமுத்தூர் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு யாரோ மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் வீட்டினுள் சென்று பார்த்தபோது அங்கிருந்த பீரோவையும் உடைத்து அதிலிருந்த 157 கிராம் எடையிலான நகைகள் மற்றும் ரூ.10,700ஐ மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து சுரேஷ் மூன்றடைப்பு போலீசில் புகார் செய்தார். எஸ்ஐ மாரியப்பன் வழக்குப் பதிவு செய்து கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகிறார். இதில் கொள்ளை போன நகை, பணத்தின் மொத்த மதிப்பு ரூ 2 லட்சத்து 90 ஆயிரம் ஆகும்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை