ரூ.18 ஆயிரத்துக்கு தேங்காய் ஏலம்

 

ஈரோடு, ஏப். 24: சென்னிமலை அருகே உள்ள வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.18 ஆயிரத்துக்கு நேற்று தேங்காய் ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்தில் பங்கேற்க வெப்பிலி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 1,550 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

இதில், ஒரு கிலோ தேங்காய் குறைந்தபட்ச விலையாக ரூ.29.25க்கும், அதிகபட்ச விலையாக ரூ.30.25க்கும், சராசரி விலையாக ரூ.29.41க்கும் ஏலம் மூலமாக விற்பனையானது. மொத்தம் 630 கிலோ தேங்காய்கள் ரூ.18 ஆயிரத்து 911 என விற்பனையானது

Related posts

நலத்திட்ட உதவி வழங்கல்

பூங்கா பராமரிப்புக்கு நிதி ஒதுக்க மனு

விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்