ரூ.100 கோடியில் ஆதிதிராவிடர் நலத்துறையின் 150 பள்ளிகள் தரம் உயர்த்தப்படும்: அமைச்சர் கயல்விழி அறிவிப்பு

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் நேற்று ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை  மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதில் அளித்து அமைச்சர் கயல்விழி  செல்வராஜ் வெளியிட்ட அறிவிப்புகள்:* ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ்  இயங்கி வரும் 150 பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.100 கோடி  மதிப்பீட்டில் புதிய வகுப்பறைகள் மற்றும் ஆய்வக கட்டிடங்கள் கட்டப்படும்.* ஆதிதிராவிடர் மக்கள்  தங்கள் வீட்டு சுப நிகழ்ச்சிகள் நடத்த  20 இடங்களில் சமுதாய கூடங்கள் கட்டப்படும்.* 1000 விவசாயி களுக்கு துரித மின் இணைப்பு  திட்டத்தின் கீழ் 90 சதவீதம் மானியம் வழங்கப்படும்.* காஞ்சிபுரம் மாவட்டத்தில் பட்டா வழங்கப்பட்ட 443 இருளர் இன பழங்குடியினர்  குடும்பங்களுக்கு, புதிய வீடுகள் கட்டப்படும்.* மாநில அரசின் சிறப்பு போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை, ஒன்றிய அரசு வழங்குவதற்கு இணையாக உயர்த்தி  வழங்கப்படும்.* ஆதிதிராவிடர் விடுதி மாணாக்கருக்கு விழா நாட்களில் வழங்கப்பட்டு வரும் சிறப்பு உணவு கட்டணம் இரண்டு மடங்காக உயர்த்தி வழங்கப்படும்.* 512 ஆதிதிராவிடர் நல விடுதிகளுக்கு மிக்சி வழங்கப்படும். கணினி ஆய்வாகங்களுக்கு இன்வர்ட்டர் வழங்கப்படும். …

Related posts

3 குழந்தைகளுக்கு அரிய, சிக்கலான அறுவை சிகிச்சை: எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனை சாதனை

மறுசீரமைப்பு பணிகளுக்காக அடுக்குமாடி குடியிருப்புகளில் தற்காலிக மின் இணைப்பு வழங்கக்கூடாது: மின்வாரியம் உத்தரவு

கூவம் ஆற்றில் கொட்டப்பட்ட கட்டிட கழிவுகளை 14ம் தேதிக்குள் அகற்றாவிடில் அபராதம் விதிக்க நேரிடும்: பசுமை தீர்ப்பாயம் எச்சரிக்கை