ராயக்கோட்டை: கிருஷ்ணகிாி மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான ஏக்காில் மாந்தோட்டங்கள் உள்ளன. மாவட்டத்தில் மா விளைச்சல் அதிகமாக இருப்பதால், மாங்கனி கண்காட்சியை வருடந்தோறும் அரசு நடத்தி வருகிறது. கொரோனா காரணமாக கடந்த 2 வருடங்களாக மாங்கனி கண்காட்சியை அரசு நடத்தவில்லை. இந்த வருடம் மா விளைச்சல் வெகுவாக குறைந்துள்ளதால், அரசு இழப்பீடு தர வேண்டும் என விவசாயிகள் அரசுக்கு கோாிக்கை விடுத்துள்ளனர். நடப்பாண்டு ராயக்கோட்டை பகுதிகளில் மா விளைச்சல் விவசாயிகளுக்கு ஓரளவிற்கு கை கொடுத்துள்ளது. அதற்கேற்ற சீதோஷ்ண நிலை நிலவுவதால், மாங்காய்கள் தரமானதாகவும், அளவில் பொியதாகவும் காய்த்துள்ளன. மாங்கூழ் தயாாிப்பு நிறுவனங்கள் ராயக்கோட்டை பகுதியில் நன்கு விளைச்சலாகியுள்ள மாங்காய்களை கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்….