ராமேஸ்வரம் கடலில் மூழ்கி தத்தளித்த 2 மாணவர்கள் உயிருடன் மீட்பு

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கடலில் மூழ்கி தத்தளித்த 2 மாணவர்கள் உயிருடன் மீட்கப்பட்டனர். ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் அம்பேத்கர் நகரை சேர்ந்த பள்ளி மாணவர்களான தவசிப்பாண்டி (12), வசந்த் (11) உட்பட 3 பேர் நேற்று முன் தினம் மாலை ராமேஸ்வரம் துறைமுக கடற்கரை பகுதிக்கு குளிக்க சென்றனர். கடலில் குளித்து கொண்டிருந்த போது தவசிப்பாண்டி, வசந்த் ஆகிய இருவரும் கடலில் மூழ்கி தத்தளித்தனர். இதனை பார்த்த கரையில் இருந்த மீனவர்கள் உடனடியாக கடலில் இறங்கி 2 மாணவர்களையும் மீட்டு சிகிச்சைக்காக ராமேஸ்வரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மாணவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து மாணவர்களின் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் மருத்துவமனைக்கு விரைந்து வந்து குழந்தைகளை கவனித்து வருகின்றனர். இச்சம்பவத்தால் ராமேஸ்வரம் கடற்கரை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related posts

நிலக்கடலையில் கூடுதல் மகசூல் வேளாண்துறையினர் அட்வைஸ்

திருத்தங்கல்லில் மண்ணெண்ணெய் குண்டு வீசிய வழக்கில் 5 பேர் கைது

பிளாஸ்டிக் கழிவுகளால் கால்நடைகளுக்கு ஆபத்து