Monday, July 1, 2024
Home » ராமேஸ்வரத்திலிருந்து இலங்கைக்கு கடத்தல் 1 கோடி போதைப்பொருள் நடுக்கடலில் பறிமுதல்: 3 பேர் படகுடன் கைது

ராமேஸ்வரத்திலிருந்து இலங்கைக்கு கடத்தல் 1 கோடி போதைப்பொருள் நடுக்கடலில் பறிமுதல்: 3 பேர் படகுடன் கைது

by kannappan

ராமேஸ்வரம்: பாக் ஜலசந்தி கடல் பகுதியில் வடக்கு இலங்கை கடற்படை பிரிவைச் சேர்ந்த கடற்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். நெடுந்தீவு கடல் பகுதியில் ரோந்து சென்றபோது நடுக்கடலில் 3 படகுகள் சென்றுள்ளது. கடற்படையினர் 3 படகுகளையும் துரத்தி சென்றபோது ஒரு படகு மட்டும் தனியாக சென்றுள்ளது. சந்தேகமடைந்த கடற்படையினர் படகை துரத்திச் சென்று வழிமறித்து சோதனை செய்தனர். படகில் ஒரு கிலோ எடையுள்ள கிரிஸ்டல் மெத்தபெடமைன் போதைப்பொருள் இருந்துள்ளது. போதைப்பொருளை கைப்பற்றிய கடற்படையினர் படகில் இருந்த 3 பேரை பிடித்து விசாரணை செய்தனர். இதில் தலைமன்னார் மாவட்டம், பூனேரி பகுதியை சேர்ந்தவர்கள் என்பதும், ராமேஸ்வரத்தில் இருந்து படகில் போதைப்பொருளை கடத்தி வந்ததாகவும் விசாரணையில் தெரிவித்தனர். 3 பேரையும் கைது செய்த கடற்படையினர் படகை பறிமுதல் செய்தனர். விசாரணைக்குப்பின் போதைப்பொருளும், 3 பேரும் இலங்கை போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். போதைப்பொருளின் சர்வதேச மதிப்பு ஒரு கோடி ரூபாயாகும். …

You may also like

Leave a Comment

3 × 2 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi