ராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராஜினாமா ஏற்பு

சென்னை: ராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் தலைவராக செல்லத்துரை அப்துல்லா பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி தனது மாவட்ட தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக கூறி கட்சி தலைமைக்கு கடிதம் அனுப்பி வைத்தார். இந்நிலையில் அவர் அனுப்பிய ராஜினாமா கடிதத்தின் மீது கட்சி தலைமை நடவடிக்கை எடுத்துள்ளது. இதுகுறித்து, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: ராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் தலைவர் செல்லத்துரை அப்துல்லாவின் ராஜினாமா கடிதம் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. அவருக்குப் பதிலாக பொறுப்புக்குழு நியமிக்கப்படுகிறது. அக்குழுவின் தலைவராக சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் மலேசியா பாண்டியன் செயல்படுவார். உறுப்பினர்களாக ஜே.இ.எஸ். ரமேஷ்பாபு, ராஜாராம் பாண்டியன், எம்.தெய்வேந்திரன், கோட்டை முத்து ஆகியோர் செயல்படுவார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்….

Related posts

குப்பையில் கிடந்த துப்பாக்கி

வீட்டை இடிக்க அதிகாரிகள் வந்ததால் நடுரோட்டில் தீக்குளித்த வாலிபர்: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

மழைநீர் கால்வாயை முறையாக அமைக்காததால் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீர்: நடவடிக்கை கோரி பெண்கள் மறியல்