ராமநாதபுரம், மே 31: ராமநாதபுரம் கலெக்டர் விஷ்ணுசந்திரன் தகவல்: ராமநாதபுரம் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் திருச்சி முத்தரசநல்லூர், தலைமை நீரேற்று நிலையத்தில் இருந்து நீருந்து செய்யும் பிரதான குழாய்களில் உள்ள கசிவுகள் சரிசெய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அதனால் ராமநாதபுரம் மாவட்டத்தில் 31.05.2024 மற்றும் 01.06.2024 ஆகிய இரண்டு தினங்கள் காவிரி கூட்டுக்குடிநீர் விநியோகம் இருக்காது. இவ்வாறு தெரிவித்துள்ளார்.