ராமநாதபுரம் பேக்கரியில் தீ: சேர், டேபிள்கள் எரிந்து நாசம்

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் உள்ள பிரபல பேக்கரி ஒன்றில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டது. இதில் சேர், டேபிள்கள் எரிந்து நாசமடைந்தன. ராமநாதபுரத்தில் உள்ள தேவிபட்டினம் சாலையில் கேணிக்கரை சந்திப்பில் பிரபல பேக்கரி உள்ளது. இந்த பேக்கரியில் கடந்த சில நாட்களாக பராமரிப்பு பணி நடந்து வருகிறது. இந்நிலையில் இன்று காலை 6.30 மணியளவில் இந்த பேக்கரியில் வைக்கப்பட்டிருந்த காஸ் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு, தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனை பார்த்து அங்கிருந்த தொழிலாளர்கள் அலறியடித்தபடி வெளியில் ஓடினர். தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் பேக்கரியில் இருந்த டேபிள், சேர்கள் உள்ளிட்ட பொருட்கள் தீயில் எரிந்து நாசமடைந்தன. தீயில் சேதமடைந்த பொருட்களின் மதிப்பு குறித்து தெரியவில்லை. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது….

Related posts

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே மஞ்சுவிரட்டு தகராறில் அண்ணன், தம்பி இருவர் வெட்டி கொலை..!!

திருத்தம் செய்யப்பட்ட பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு இன்று முதல் அமல்: தமிழக அரசு தகவல்

திருப்பூரில் தண்டவாளத்தை கடக்க முயன்ற 2 பேர் ரயில் மோதி உயிரிழப்பு