ராமநாதபுரத்தில் கஞ்சா வைத்திருந்த 2 வாலிபர்கள் கைது

ராமநாதபுரம், ஜூன் 25: ராமநாதபுரத்தில் கஞ்சா வைத்திருந்த இரண்டு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். ராமநாதபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பேராவூர் பகுதியில் கஞ்சா விற்பதாக கேணிக்கரை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் எஸ்.ஐ தினேஷ் பாபு தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது போலீசாரை கண்டதும் இரண்டு வாலிபர்கள் ஓடினர். அவர்களை விரட்டி பிடித்து சோதனை செய்ததில் அவர்களிடம் கஞ்சா இருப்பது தெரியவந்தது.

அவர்களிடம் விசாரணை செய்ததில் ஒருவர் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த காஞ்சம் மாவட்டம், அம்ருடுலு கிராமத்தைச் சேர்ந்த கோலக் பிகாரி பாலா(23), மற்றொருவர் தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் கோட்டூர் கிராமத்தை சேர்ந்த மாரிமுத்து மகன் வெங்கடேசன் (24) என்பது தெரிய வந்தது. இதனையடுத்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 4 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. இருவரையும் கைது செய்த போலீசார் கஞ்சாவை பறிமுதல் செய்து, அவர்களை சிறையில் அடைத்தனர்.

Related posts

பல்கலைக்கழக நிர்வாகம் தகவல் வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில்

முன்னாள் துணை கலெக்டர் மயங்கி விழுந்து சாவு வேலூர் கலெக்டர் அலுவலகத்தில்

3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றினால் இடமாற்றம் பட்டியல் தயாரிக்க உத்தரவு பள்ளிக்கல்வித்துறையில்