ராமசாமி 23ம் ஆண்டு நினைவு நாள்

ராசிபுரம், ஜூலை 6: நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் கே.ஆர்(எ) ராமசாமியின் 23ம் ஆண்டு நினைவு தினம், நேற்று அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி, ராசிபுரம் கூட்டுறவு தொடக்க வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான ராஜேஸ்குமார் எம்.பி., தலைமை தாங்கினார். நாமக்கல் மாதேஸ்வரன் எம்.பி., நாமகிரிப்பேட்டை ஒன்றிய திமுக செயலாளர் ராமசுவாமி, ராசிபுரம் நகர திமுக செயலாளர் சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில், ராமசாமியின் திருவுருவப் படத்திற்கு வங்கி செயலாளர் கோவிந்தராஜ், வங்கி தலைவர் கந்தசாமி ஆகியோர் மலரஞ்சலி செலுத்தினர். திமுக நிர்வாகிகள், கொமதேக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை