ராணுவ குடியிருப்பில் தீ

பல்லாவரம்:  பல்லாவரம் கன்டோண்மென்ட் பகுதி ராணுவ குடியிருப்பில் கன்னியாகுமரிைய சேர்ந்த ஜெயின் ராஜ் (32) என்ற ராணுவ அதிகாரி, தனது மனைவி சிமிமோலுடன் (32) வசித்து வருகிறார். இவர்களது வீட்டில் எறும்புகள் தொல்லை அதிகமாக இருந்ததால், அவற்றை விரட்ட சிமிமோல் நேற்று எறும்பு புற்றின் மீது மண்ணெண்ணெய் ஊற்றியுள்ளார். எதிர்பாராத விதமாக இதில் தீப்பொறி பட்டதில் வீடு முழுவதும் தீ பரவியது. அதை அணைக்க முயன்ற சிமிமோல் மீதும் தீ பட்டு காயமடைந்தார். அவரை மீட்டு ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதேபோல், அம்பத்தூர் தொழிற்பேட்டை மண்ணூர்பேட்டை பிள்ளையார் கோயில் தெருவில் உள்ள சேது என்பவரின் ரப்பர் பெல்ட் குடோனில் நேற்று மாலை தீவிபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் 3 மணி நேரம் போராடி தீயை அனணத்தனர். …

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை