ராஜராஜன் சிபிஎஸ்இ பள்ளியில் புதிய மாணவர்களுக்கு வரவேற்பு விழா

காரைக்குடி, ஜூன் 20: காரைக்குடி அருகே அமராவதிபுதூரில் ராஜராஜன் சிபிஎஸ்இ பள்ளியில் புதிதாக சேர்ந்த மாணவர்களுக்கு வரவேற்பு விழா நடந்தது. பள்ளி முதல்வர் ரமணன் வரவேற்றார். பேச்சாளர் கு.ஞானசம்பந்தம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். கவிஞர் தங்கம் மூர்த்தி வாழ்த்துரை வழங்கினார். கல்விகுழும ஆலோசகர், முன்னாள் துணைவேந்தர் எஸ்.சுப்பையா தலைமை வகித்து பேசுகையில், எங்கள் பள்ளியில் மாணவர்களின் ஆர்வத்தை கண்டறிந்து அதற்கு ஏற்றார் போல் உருவாக்குகிறோம்.

பள்ளியில் பாட்டு, மொழி பயிற்சி, கராத்தே, சிலம்பம் உள்பட பல்வேறு துறைகளில் தனித்தனி ஆசிரியர்களை கொண்டு கற்றுத்தருகிறோம், என்றார். ராஜராஜன் பொறியியல் கல்லூரி முதல்வர் இளங்கோ உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக பள்ளியில் புதிதாக சேர்ந்த மாணவர்களை ஏற்கனவே படிக்கும் மாணவர்கள் மாலை அணிவித்து பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். பள்ளி முதல்வர் வாசுகி நன்றி கூறினார்.

Related posts

அலங்காநல்லூர் அருகே மண் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி பலி

சமயநல்லூர் அருகே சரக்கு வேன் மோதி வாலிபர் பலி

விபத்தின்றி பணியாற்றிய டிரைவருக்கு தங்க பதக்கம்