ராகுல் காந்தியின் ஒற்றுமை பயணத்தில் அனைத்து இந்தியர்களும் கைகோர்ப்பது கட்டாயம்: கே.எஸ்.அழகிரி அறிக்கை

சென்னை: ராகுல் காந்தியின் ஒற்றுமை பயணத்தில் அனைத்து இந்தியர்களும் கைகோர்த்து இணைய வேண்டியது காலத்தின் கட்டாயம் என்று கே.எஸ்.அழகிரி அறைகூவல் விடுத்துள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ராகுல்காந்தி, செப்டம்பர் 7ம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கி காஷ்மீர் வரை 3500 கி.மீ., 150 நாட்கள் இந்திய ஒற்றுமை பயணத்தை மேற்கொள்ள இருக்கிறார். ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை பயணத்தில் அனைத்து இந்தியர்களும் கைகோர்த்து இணைய வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். இந்திய ஒற்றுமைப் பயணம் கன்னியாகுமரியில் இருந்து செப்டம்பர் 7ம் தேதி மாலை 4 மணியளவில் திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் பாறை, காமராஜ் மண்டபத்திற்கு சென்ற பிறகு காந்தி மண்டபத்தில் தலைவர் ராகுல்காந்தியிடம்,முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடியை வழங்குகிறார். தொடர்ந்து 600 மீட்டர் பயணத்தை மேற்கொண்டு அருகில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாபெரும் பொதுக்கூட்டத்தில் ராகுல்காந்தி உரை நிகழ்த்துகிறார். இந்திய அரசியல் வரலாற்றில் மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்தும் இந்திய ஒற்றுமைப் பயணத்தில் அனைவரும் இணைய கன்னியாகுமரிக்கு அலை அலையாய் வாருங்கள் என தமிழ் கூறும் நல்லுலகத்தில் உள்ள அனைத்து மக்களையும் அன்போடு அழைக்கிறோம்….

Related posts

நாடாளுமன்றத்தில் மணிப்பூரின் 2வது எம்பியை பேசுவதற்கு அனுமதிக்கவில்லை: ஒன்றிய அரசு மீது காங். குற்றச்சாட்டு

இந்து மத கொள்கைகளை புரிந்து கொள்ளவில்லை: பாஜ மீது ராகுல்காந்தி குற்றச்சாட்டு

சிறையில் இருந்தபடி போதைப்பொருள் விற்பனை: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு