ரவுடிகள் உட்பட 5 பேருக்கு குண்டாஸ்

சென்னை: சென்னையில் கொலை உட்பட பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டு வந்த ரவுடிகள் உட்பட 5 பேரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர். சென்னையில் கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வரும் நபர்களை போலீஸ் கமிஷனர் உத்தரவுப்படி போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து வருகின்றனர். அந்த வகையில், எம்.கே.பி.நகர் பகுதியில் தொடர் கஞ்சா விற்பனை செய்து வந்த சென்னை ஞாயிறு அட்டப்பாளையத்தை ேசர்ந்த ராதாகிருஷ்ணன்(36), கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகளில் தொடர்புடைய வியாசர்பாடி தாமோதரன் நகரை சேர்ந்த மாயகிருஷ்ணன்(30), விபாசர்பாடி புது நகரை சர்ந்த பிரசாந்த்(28) மற்றும் சங்கர் நகர் காவல் நிலையம் பகுதியில் கணேசன்  என்பவரை கொலை செய்த வழக்கு உட்பட 12 குற்ற வழக்கில் தொடர்புடைய நாகல்கேணி ஈஸ்வரி நகர் 5வது தெருவை சேர்ந்த அன்பழகன்(எ)மைனாகுட்டி(43), அதே பகுதியை சேர்ந்த ரவுடி சுகுமார்(28) உட்பட 5 பேரை போலீஸ் கமிஷனர் உத்தரவுப்படி போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்….

Related posts

ஒசூரில் தனியார் வங்கி ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து 14.5 லட்சம் கொள்ளை!

செய்யாறில் இன்று திருமணம் நடக்க இருந்தது காஞ்சிபுரம் சென்ற மணப்பெண் கடத்தலா?

பாமக பிரமுகருக்கு அரிவாள் வெட்டு