ரவிதாஸ் ஜெயந்தி : பிரதமர் மோடி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் பிரார்த்தனை!!

ரவிதாஸ் ஜெயந்தியை முன்னிட்டு டெல்லி கரோல்பாக்கில் பிரதமர் மோடி பிரார்த்தனை செய்தார்.குரு ரவிதாஸ் திருவுருவச் சிலைக்கு அவர் தீப ஆராதனை காட்டி பூஜைகள் செய்தார். பின்னர் அங்கிருந்த பக்தர்களுடன் அமர்ந்து, அவர்கள் பாட்டுப்பாட அதற்கேற்ப பிரதமர் மோடி இசைக்கருவி ஒன்றை இசைத்து கீர்த்தனையில் ஆர்வமுடன் பங்கேற்றார். உத்தரப் பிரதேச மாநிலம் வாராணசியில் உள்ள ரவிதாஸ் கோயிலில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி இருவரும் வழிபாடு செய்தனர். பின்னர் அங்கு வந்த பக்தர்களுக்கு உணவு பரிமாறி தாங்களும் அவர்களுடன் அமர்ந்து சாப்பிட்டனர்.

Related posts

காசாவில் உயிரிழந்த குழந்தைகளின் நினைவாக வாசகங்களுடன் காட்சிப்படுத்தப்பட்ட டெடி பொம்மைகள்..!!

போருக்கு நடுவே அல்லப்படும் லெபனான் மக்கள் : ஊரை காலி செய்யும் அவலம்!!

மகாராஷ்டிராவில் தனியார் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: 4 பேர் பலி