ரயில் மோதி வாலிபர் பலி

 

பெரம்பூர் : சென்னை திரு.வி.க நகர் இஎஸ்ஐ மருத்துவமனை சாலையை சேர்ந்தவர் நாகராஜ் (30). கோயம்பேட்டில் உள்ள தனியார் ஷாப்பிங் மாலில் வேலை செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் வியாசர்பாடியில் உள்ள அவரது நண்பரை பார்ப்பதற்காக ரயிலில் வந்துள்ளார். அப்போது ரயிலில் இருந்து இறங்கி தண்டவாளத்தை கடக்க முயன்றபோது, சென்னை சென்ட்ரலில் இருந்து ஹூக்ளி சென்ற விரைவு ரயில் மோதி படுகாயமடைந்தார். அவரை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு நேற்று முன்தினம் மாலை சிகிச்சை பலனின்றி நாகராஜ் உயிரிழந்தார். இதுகுறித்து பெரம்பூர் ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை