ரயில் மோதி மூதாட்டி பலி

ஊத்தங்கரை, மார்ச் 14: ஊத்தங்கரையை அடுத்த ஆனந்தூர் அருகே ரெட்டிபட்டி பகுதியைச் சேர்ந்தவர் மூக்கிஅம்மாள் (74). இவர் முதியோர் உதவித் தொகையை, வங்கியில் எடுப்பதற்காக கல்லாவி ரயில் நிலையம் அருகில் பாதையை கடந்து சென்றார். அப்போது, அவ்வழியாக வந்த ரயில் அவர் மீது மோதியதில், தூக்கி வீசப்பட்ட அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்ற சேலம் ரயில்வே போலீசார், மூதாட்டியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை