ஆலந்தூர்: பாண்டிச்சேரி – எழும்பூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலின் கழிப்பறை அருகே சிலர் பயணிகளுக்கு இடையூறாக சூதாட்டம் ஆடுவதாக ரயில்வே முதன்மை கோட்ட பாதுகாப்பு ஆணையர் கே.செந்திலுக்கு புகார் வந்தது. அவரது உத்தரவின்பேரில் பரங்கிமலை ரயில்வே பாதுகாப்புப்படை நிலைய ஆய்வாளர் விஜயகுமார் தலைமையிலான தனிப்படை போலீசார், திரிசூலம் வழியாக வந்த விரைவு ரயிலில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது கழிவறைக்கு செல்லும் வழியில் சூதாட்டம் ஆடிக்கொண்டிருந்த 10 பேரை கைது செய்தனர். அவர்களை பரங்கிமலை ரயில்வே பாதுகாப்புப்படை காவல்நிலையத்திற்கு கொண்டு சென்றனர். பின்னர், ரயில்வே சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து ரயில்வே சிறப்பு மாஜிஸ்திரேட் முன், ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த மாஜிஸ்ட்ரேட் கைது செய்யப்பட்டவர்களுக்கு தலா ரூ.1000 அபராதம் விதித்து எச்சரித்து அனுப்பினார்….