ரயிலில் இருந்து தவறி விழுந்து வாலிபர் பலி

விருத்தாசலம், மார்ச் 14: சென்னையில் இருந்து மதுரை வரை செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் நேற்று மாலை 3 மணியளவில் சென்னையில் புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. ரயிலின் படிக்கட்டில் பயணம் செய்த வாலிபர் ஒருவர் தவறி கீழே விழுந்துள்ளார். தகவல் அறிந்த விருத்தாசலம் ரயில்வே போலீசார் தண்டவாளத்தில் இறந்து கிடந்த வாலிபரின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அதில், சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை தாலுகா கிருஷ்ணராஜபுரம் பகுதியைச் சேர்ந்த ஜமாலுதீன் மகன் மீரா உசேன்(34) என தெரிய வந்தது. தொடர்ந்து அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்த போலீசார், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்த புகாரின் பேரில் விருத்தாசலம் ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து அவர் எப்படி ரயிலில் இருந்து தவறி விழுந்தார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

கிராமத்தில் புகுந்த ஒற்றை யானை விரட்டியடிப்பு

சாமியார் கொலையில் மேலும் ஒருவர் கைது வள்ளிமலை அருகே நடந்த

₹3.50 கோடி ஜிஎஸ்டி பாக்கி தகவலால் வேலை தேடும் வாலிபர் அதிர்ச்சி நடவடிக்கை கோரி வேலூர் கலெக்டரிடம் புகார் பான் எண் மூலம் கோவையில் போலி நிறுவனம்