ரயிலில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பலி

சேலம், செப்.14: ஈரோட்டில் இருந்து சேலம் வழியே சென்னைக்கு ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. கடந்த 11ம் தேதி இரவு சென்னை ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயிலில் பின்பக்க முன்பதிவில்லா பெட்டியில் அதிகளவு பயணிகள் கூட்டம் இருந்தது. இதனால், படிக்கட்டு வரை பயணிகள் அமர்ந்திருந்து, பயணித்தனர். இதில், சேலத்தை அடுத்த சாமல்பட்டி ரயில்வே ஸ்டேஷன் யார்டு பகுதியில் ரயில் சென்று கொண்டிருந்தபோது, படிக்கட்டில் அமர்ந்திருந்த சுமார் 55 வயது மதிக்கத்தக்க தொழிலாளி, திடீரென கீழே தவறி விழுந்தார். இதனை பார்த்த இதர பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் இதுதொடர்பாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர். சேலம் ரயில்வே போலீஸ் சிறப்பு எஸ்ஐ கோபண்ணா தலைமையிலான போலீசார் சம்பவ இடம் சென்று பார்த்தபோது, ரயிலில் இருந்து தவறி விழுந்த நபர், உடல் நசுங்கி பலியாகி கிடந்தார். அவரது முகம், அடையாளம் தெரியாத அளவிற்கு சிதைந்திருந்தது.இறந்தவரின் சடலத்தை கைப்பற்றிய போலீசார், அவர் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர்? என விசாரித்து வருகின்றனர்.

Related posts

கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருக்காட்டுப்பள்ளியில் மாபெரும் பெட்டிஷன் மேளா

அரசு பள்ளி மாணவர்கள் தூய்மை திருவிழா விழிப்புணர்வு பேரணி