ரயிலில் இருந்து தவறி விழுந்து வாலிபர் சாவு

மானாமதுரை, ஜூன் 19: பரமக்குடி அருகே குறிச்சி கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணி மகன் ராதாகிருஷ்ணன் (36). ஜேசிபி ஆபரேட்டர். கோயில் திருவிழாவிற்கு வந்து விட்டு சென்னை செல்வதற்காக நேற்று முன்தினம் இரவு சேது எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்தார். கீழப்பசலை அருகில் ரயில் சென்றபோது, நிலை தடுமாறி விழுந்ததில் ராதாகிருஷ்ணன் உயிரிழந்தார். மானாமதுரை ரயில்வே போலீசார் வழக்குபதிவு செய்து உடலை கைப்பற்றி, பிரதே பரிசோதனைக்கு பின் உடலை குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை