ரயிலில் அடிபட்டு முதியவர் பலி

திருச்சி, ஆக.10: திருச்சி அருகே ரயிலில் அடிபட்டு முதியவர் உயிரிழந்தார். அவர் யார் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சி கல்பட்டிசத்திரம் ரயில் நிலையத்திற்கும் அய்யலூர் ரயில் நிலையத்திற்கு இடையே 65 வயது மதிக்கத்தக்க ஆண் நபர் ஒருவர் ரயிலில் அடிபட்டு நேற்று உயிரிழந்தார். இது குறித்த தகவலின் பேரில் திருச்சி ரயில்வே எஸ்.ஐ லெட்சுமி மற்றும் போலீசார் விரைந்து சென்று உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ரயில்வே இருப்பு பாதை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

மணல் கடத்திய டிராக்டர் டிப்பர் பறிமுதல்

உளுந்தூர்பேட்டையில் அக். 2ம் தேதி விசிக மது ஒழிப்பு மகளிர் மாநாடு ஆயத்தப் பணி

ஆசிரியரை பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல்