ரத்த வாந்தி எடுத்து ஆட்டோ ஓட்டுனர் சாவு

 

ஈரோடு, ஜூலை 24: ஈரோடு மாவட்டம், சித்தோடு அருகே உள்ள லட்சுமி நகர், ஈ.பி. காலனியை சேர்ந்தவர் கந்தசாமி (53). இவரது மனைவியும், மூத்த மகனும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டனர். இளைய மகன் சிவகுமார் (35). இவருக்கு திருமணமாகவில்லை. இவர், காலிங்கராயன் பாளையம் பஸ் நிறுத்தத்தில், சொந்தமாக ஆட்டோ ஓட்டி வந்தார். சிவகுமாருக்கு மது அருந்தும் பழக்கம் காரணமாக நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டு, கடந்த ஒரு வருடமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 21ம் தேதி மதியம், சிவகுமாரும், அவரது தந்தை கந்தசாமியும் வீட்டில் இருந்தனர். அப்போது சிவகுமார் திடீரென ரத்த வாந்தி எடுத்துள்ளார். உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் உயர் சிகிச்சைக்காக பவானி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர், சிவகுமார் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து, அவரது தந்தை நேற்று முன்தினம் சித்தோடு போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை