யோகா ஒலிம்பியாட் மாவட்ட அணி தேர்வு

 

விருதுநகர், ஜூன் 10: தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்குழு சார்பாக தேசிய அளவில் பள்ளிகளுக்கு இடையேயான யோகா ஒலிம்பியாட் போட்டிகள் ஆண்டுதோறும் நடந்து வருகிறது. விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கில் மாவட்ட அளவிலான 14 முதல் 17 வயதிற்கு உட்பட்ட மாணவ, மாணவியருக்கான போட்டிகளில் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ஜாஹிர் உசேன் தலைமையில் 125 மாணவ, மாணவியர் பங்கேற்றனர். மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெறும் போட்டியாளர்கள் மாநில அளவில் ஜூன் 12ல் சென்னையில் நடைபெற உள்ள போட்டியில் பங்கேற்க தகுதி பெறுவர். போட்டி நடுவர்களாக பிச்சை, சீனிவாசன், கவிதா, ஷிலியா, பிளாரன்ஸ், இந்திரா செயல்பட்டனர்.

Related posts

வெளிநாட்டில் வேலை வள்ளியூர் பிரமுகரிடம் ரூ.10 லட்சம் மோசடி: கேரள முதியவர் கைது

சுரண்டை அரசு கல்லூரியில் சேர விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

ஒன்றிய தொழிலாளர் அமைச்சகம் மூலம் பீடித் தொழிலாளர்கள் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை ஆணையர் தகவல்