விருதுநகர், ஜூன் 12: விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கில் பள்ளிக்கல்வித்துறை சார்பில், மாவட்ட அளவிலான யோகா ஒலிம்பியாட் தேர்வு போட்டிகள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வளர்மதி தலைமையில், மாவட்ட கல்வி அலுவலர் இந்திரா முன்னிலையில் நடைபெற்றது.
போட்டியில் 6 முதல் 8ம் வகுப்பு, 9 மற்றும் 10ம் வகுப்பு என இரு பிரிவுகளில் நடத்தப்பட்ட யோகா போட்டியில் 150 மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். ஒவ்வொரு பிரிவிலும் 4 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் ஜூன் 14ல் மதுரையில் நடைபெற உள்ள மாநில அளவிலான போட்டியில் பங்கு பெறுவர். மாநில அளவில் வெற்றி பெறுபவர்கள் தேசிய அளவிலான போட்டிகளில் கலந்து கொள்வார்கள்.