யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள்

திருவாடானை ஜூலை 23: திருவாடானையில் அடிப்படை வசதி கேட்டு யூனியன் அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டனர். திருவாடானை அருகே மாவூர் ஊராட்சியை சேர்ந்த மாவூர், கங்கானேந்தல், மங்கலம் ஆகிய கிராமங்களில் போதிய சாலை வசதி இல்லை. மேலும் தேவையான குடிதண்ணீர் வசதியும் இல்லாததால் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் திருவாடானை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு திரண்டு வந்து முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

வட்டார வளர்ச்சி அலுவலர் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அந்த பேச்சுவார்த்தையில் நான்கு தினங்களுக்குள் குடிநீர் பிரச்னையை தீர்த்து வைப்பதாக கூறியதை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை