மதுரை: யூடியூபர் மாரிதாஸ் மீதான வழக்கை ஐகோர்ட் கிளை ரத்து செய்தது. மதுரையை சேர்ந்த யூடியூபர் மாரிதாஸ், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: திமுகவை களங்கப்படுத்தி, அவதூறு ஏற்படுத்தும் வகையில் கருத்து வெளியிட்டதாக தூத்துக்குடி திமுக மாணவரணி பிரமுகர் உமரிசங்கர் என்பவர், தூத்துக்குடி ஜேஎம் 3 நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கின் விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து விலக்களிக்க வேண்டும். வழக்கின் மேல் நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட வழக்கை ரத்து ெசய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், மனுதாரர் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்….