யானை தாக்கி உயிரிழந்தவர் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரண நிதி: வனத்துறை அமைச்சர் அறிவிப்பு

சென்னை: சட்டப்பேரவையில் நேற்று வேப்பனஹள்ளி கே.பி.முனுசாமி (அதிமுக) சிறப்பு கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்த பேசும்போது, ‘‘வேப்பனஹள்ளி தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் யானை தாக்கி விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளார். அவரது குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க வேண்டும்’’ என்றார். அதற்கு பதில் அளித்து வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் பேசுகையில், ‘‘கடந்த 9-4-2022 அன்று காலை 5 மணிக்கு திம்மப்ப நாயக்கர்(64)  என்பவர் யானை தாக்கி இறந்திருக்கிறார். வன உயிரினம் தாக்கி பலியானோர் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டு வந்தது. தற்போது, அந்த தொகை ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. அவரது குடும்பத்துக்கு உடனடியாக ரூ.50 ஆயிரம் நிதி வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள ரூ.4.5 லட்சம் விரைவில் வழங்கப்படும்’’ என்றார். …

Related posts

தனியார் மருத்துவமனை அறுவை சிகிச்சையில் பங்கேற்ற அரசு மருத்துவர் மீது ஏன் நடவடிக்கை இல்லை?: அரசு பதில்தர ஐகோர்ட் உத்தரவு

கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்கள் விலை திடீர் சரிவு: கிலோ மல்லி ₹300 சாமந்தி ₹240க்கு விற்பனை

தமிழகம் முழுவதும் கூட்டுறவு சங்கங்களில் அதிமுக ஆட்சியில் முறைகேடாக சேர்க்கப்பட்ட 63.22 லட்சம் உறுப்பினர்கள் அதிரடியாக நீக்கம்: விரைவில் தேர்தல் நடத்த முடிவு