யதோக்தகாரி பெருமாள் கோயிலில் கருட சேவை உற்சவம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பெருமாள் கோயில் ஒன்றான யதோக்தகாரி பெருமாள் கோவில் பங்குனி பிரமோற்சவ விழா ஆண்டுதோறும் நடைபெறும். அதுபோல இந்த ஆண்டு கடந்த வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது.விழாவை முன்னிட்டு யதோக்தகாரி பெருமாளுக்கு கோமளவல்லி தாயாருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. விழாவை முன்னிட்டு பெருமாள் சப்பரம், ஹம்ச வாகனம், பேரீதாடனம், சிம்ம வாகனம், சூரிய பிரபை போன்ற பல்வேறு அலங்காரங்களில் தினம் அலங்கரிக்கப்பட்டு முக்கிய வீதிகளின் வழியாக வீதி உலா வந்தார். இதைத் தொடர்ந்து நேற்று காலை 7 மணி அளவில் முக்கிய உற்சவமான கருட சேவை உற்சவம் நடைபெற்றது. இதை முன்னிட்டு யதோக்தகாரி பெருமாள் அலங்கரிக்கப்பட்ட கருட வாகனத்தில் முக்கிய வீதிகள் வழியாக வீதி உலா வந்தார்.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசித்தனர். இதைத் தொடர்ந்து தொடர்ச்சியாக சேஷ வாகனம், தங்க பல்லாக்கு , திருத்தேர் உற்சவம், ஆள் மேல் பல்லக்கு, தொட்டி திருமஞ்சனம் ,தீர்த்தவாரி த்வாதசாராதனம், திருமஞ்சனம் உள்ளிட்ட பல்வேறு கோலங்களில் காலை அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சி அளிப்பார் அதைத் தொடர்ந்து இரவு சேனை முதன்மையார் புறப்பாடு, பேரீதாடனம், சிம்ம வாகனம், சூரிய பிரபை, அனுமந்த வாகனம், சந்திரபிரபை ,யாளி வாகனம், யானை வாகனம் திருத்தேரில் எழுந்தருளி திருமஞ்சனம் குதிரை வாகனம், வெட்டிவேர் சப்பரம் த்வஜ அவரோஹனம்,புஷ்ப பல்லக்கு போன்ற திருக்கோலங்களில் இரவு அலங்கரிக்கப்பட்ட முக்கிய வீதிகள் வழியாக உலா வருவார். அப்போது ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு பெருமாளை தரிசித்தனர்.விழாவை முன்னிட்டு விழா ஏற்பாடுகளை பரம்பரை நிர்வாக தர்மகத்தா நல்லப்பன் நாராயணன் விழா குழுவினர் செய்திருந்தனர்….

Related posts

திருச்சி மாவட்டம் பாடாலூர் அருகே இன்று அதிகாலை விபத்து: காரில் பயணித்த பெண் பலி

திருக்கோவிலூர் அருகே மின்சார டிரான்ஸ்பார்மர் வெடித்து பயங்கர தீ விபத்து

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவரான ஆம்ஸ்ட்ராங் கொலை: 8 பேர் கைது: மாயாவதி கண்டனம்