ம.ரெட்டியபட்டியில் திமுக ஆலோசனை கூட்டம்

 

திருச்சுழி, ஜூலை 25: திருச்சுழி அருகே திமுக ஊழியர்கள் கூட்டம் நடைபெற்றது.திருச்சுழி அருகே உள்ள ம.ரெட்டியபட்டியில் திமுக சார்பில் ஊழியர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வருகின்ற ஜூலை 31ல் மல்லாங்கிணற்றில் நடைபெறக்கூடிய முன்னாள் அமைச்சரும், நிதித்துறை மற்றும் மனித வள மேலாண்மைத்துறை அமைச்சருமான தங்கம் தென்னரசுவின் தந்தையார் தங்கப்பாண்டியன் நினைவு நாளை முன்னிட்டு நடைபெறக்கூடிய நினைவேந்தலில் திருச்சுழி ஒன்றியத்தில் உள்ள அனைத்து திமுக தொண்டர்கள், பிரதிநிதிகள், கழக செயலாளர்கள் தவறாது கலந்து கொள்ள வேண்டுமென தெரிவிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் தெற்கு ஒன்றிய துணைச்செயலாளர் தொல்காப்பியன் அனைவரையும் வரவேற்று பேசினார். அவைத்தலைவர் சம்சுதீன் தலைமை வகித்தனர். வடக்கு மாவட்ட திமுக சிறுபான்மையினர் நல அணி அமைப்பாளர் ஆலடிப்பட்டி செல்லத்துரை, சிலுக்குபட்டி காலனி கிளைச்செயலாளர் செந்தில், ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர் நாகமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் திருச்சுழி தெற்கு செயலாளரும், ஒன்றிய தலைவருமான பொன்னுத்தம்பி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். ஒன்றிய துணைத்தலைவர் மூக்கையா, திமுக பிரமுகர் வடக்கு மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் காளிதாஸ், தெற்கு ஒன்றிய பொருளாளர் கணக்கி முத்து உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

 

Related posts

அருமனை அருகே சோகம்; நண்பன் தூக்கிட்டு தற்கொலை அதிர்ச்சியில் தொழிலாளி சாவு

சதுர்த்தி விழா இன்று கொண்டாட்டம் விநாயகர் சிலைகள் பூஜைக்கு வைக்க தொடங்கினர்: 13ம் தேதி முதல் நீர் நிலைகளில் கரைப்பு

விஜய் வசந்த் எம்.பி. விநாயகர் சதுர்த்தி வாழ்த்து