மோசமான வானிலையால் விமானங்கள் ரத்து

சென்னை: தமிழகத்தில் கனமழை மற்றும் ரெட் அலார்ட் காரணமாக, சென்னை-மதுரை- சென்னை, மற்றும் தூத்துக்குடி-சென்னை ஆகிய 3 விமானங்கள் நேற்று ரத்து செய்யப்பட்டன. சென்னையில் இருந்து நேற்று மாலை 5.10 மணிக்கு மதுரை செல்ல இருந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானமும், மதுரையிலிருந்து இரவு 8.30 மணிக்கு சென்னை வந்து சேர வேண்டிய இண்டிகோ  ஏர்லைன்ஸ் பயணிகள் விமானமும் ரத்து செய்யப்பட்டுள்ளன. தூத்துக்குடியில் இருந்து நேற்று மாலை 5.30  மணிக்கு சென்னை வந்து சேர வேண்டிய இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானமும் ரத்து செய்யப்பட்டது. சென்னையில் இருந்து லண்டன் செல்லும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் பயணிகள் விமானம், நேற்று காலையில் 6 மணி நேரம் தாமதமாக, பகல் 1.30 மணிக்கு சென்னையில் இருந்து லண்டன் புறப்படுவதாக, பயண திட்டத்தை மாற்றி அமைத்தது. மேலும் சென்னையில் இருந்து திருச்சி, சீரடி, கோவா, மும்பை, ஹாங்காங்  போன்ற இடங்களுக்கு செல்ல வேண்டிய விமானங்களும் ஒரு மணி நேரம் முதல்  இரண்டு மணி நேரம் வரை தாமதமாக புறப்பட்டு சென்றன.  பயணிகளுக்கு தாமதம், ரத்து பற்றிய தகவல்கள் முன்னதாகவே தெரிவிக்கப்பட்டதால், பயணிகளுக்கு சிரமம் ஏற்படவில்லை….

Related posts

குப்பையில் கிடந்த துப்பாக்கி

வீட்டை இடிக்க அதிகாரிகள் வந்ததால் நடுரோட்டில் தீக்குளித்த வாலிபர்: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

மழைநீர் கால்வாயை முறையாக அமைக்காததால் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீர்: நடவடிக்கை கோரி பெண்கள் மறியல்