மோசடி செய்த வாலிபர் கைது

தேவகோட்டை, ஏப்.13: தேவகோட்டை தாலுகா வெங்களூர் சாத்தமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமசாமி(80). ஓய்வு பெற்ற ஆசிரியர். நேற்று பணம் எடுக்க தேவகோட்டை பஸ் நிலைய வீதி ஏடிஎம்மிற்கு வந்துள்ளார். அப்போது அருகில் நின்றிருந்த வாலிபர் பணம் எடுத்து தருவதாக சொல்லி ஏடிஎம் கார்டை வாங்கி ரூ.9500 எடுத்து அதில் 2 ஆயிரம் ரூபாயை வைத்துக்கொண்டு வேறு ஏடிஎம் கார்டை மாற்றி கொடுத்து விட்டு நழுவ முயன்றார். அப்போது அந்த வாலிபரை பொதுமக்கள் விரட்டி பிடித்து தேவகோட்டை டவுன் போலீசிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் கரூர் மாவட்டம் குளித்தலை தோகைமலை நெசவாளர் காலனியை சேர்ந்த தேவராஜ் மகன் காட் ஜான்(21) எனத் தெரிய வந்தது. போலீசார் அந்த வாலிபரை கைது செய்தனர்.

Related posts

ஆசிரியர்கள் கலந்தாய்வுக்கு எதிராக நடத்தும் போராட்டத்தில் பங்கேற்க மாட்டோம் பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு அறிவிப்பு

கஞ்சா விற்றவர் கைது

முப்பெரும் சட்டங்களை அமல்படுத்த எதிர்ப்பு திருச்சியில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்