மோகன்லாலின் 5 படங்கள் ஓடிடியில் ரிலீஸ்

சென்னை: மோகன்லால் நடிப்பில் தயாராகி வரும் 5 படங்கள் அடுத்தடுத்து ஓடிடியில் வெளியாக உள்ளன. கொரோனா பாதிப்பு குறைந்து தியேட்டர்கள் திறக்கப்பட்டாலும், பல படங்கள் ஓடிடியிலும் வெளியாகி வருகிறது. குறைந்த பட்ஜெட்டில் உருவாகும் பெரும்பாலான படங்களுக்கு ஓடிடி தளம் லாபம் தரக்கூடியதாக இருப்பதே இதற்கு காரணம். இந்நிலையில், முன்னணி நடிகர்களின் படங்களும் அவ்வப்போது ஓடிடியில் வெளியாகி வெற்றி பெற்று வருகின்றன. இந்நிலையில் மலையாள சூப்பர் ஸ்டாரான மோகன்லால் நடிக்கும் 5 படங்களை அடுத்தடுத்து ஓடிடியில் வெளியிட அந்த படங்களின் தயாரிப்பாளர்கள் முடிவு செய்துள்ளனர். இந்த ஆண்டு, மோகன்லால் நடித்த திரிஷ்யம் படம் ஓடிடியில் வெளிவந்தது. அடுத்ததாக பிரியதர்ஷன் இயக்கத்தில் மோகன்லால், கீர்த்தி சுரேஷ், சுனில் ஷெட்டி உள்பட பலர் நடித்துள்ள மரைக்கார் அரபிக்கடலிண்டே சிம்ஹம் படமும் ஓடிடியில் வெளியாகிறது. இதையடுத்து அலோன், ப்ரோ டாடி, ட்வெல்த் மேன் மற்றும் பெயரிடப்படாத ஒரு படம் என 5 படங்களை ஓடிடியில் ரிலீஸ் செய்ய உள்ளனர். மோகன்லாலின் இந்த படங்களை தயாரிக்கும் தயாரிப்பாளர்கள், தியேட்டரில் வெளியாகி 21வது நாளில் ஓடிடியில் வெளியிட தியேட்டர் அதிபர்களிடம் பேசியிருக்கிறார்கள். அதற்கு அவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை. இதனால் இந்த படங்களை நேரடியாக ஓடிடியிலே வெளியிட திட்டமிட்டுள்ளனர்….

Related posts

தி.நகர் சட்டமன்ற தொகுதியில் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு: ஜெ.கருணாநிதி எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்

தனிநபருக்கு எத்தனை பாட்டில் விற்கலாம்? மது விற்பனைக்கு விதிமுறை பணியாளர்கள் கோரிக்கை

இன்று காலை 6-9 மணி வரை அண்ணாநகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு