மொழிப்போர் தியாகிகளுக்கான வீரவணக்க நாள் பொதுக்கூட்டம்: அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் பங்கேற்பு

 

மானாமதுரை, ஜன. 29: மானாமதுரையில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடந்தது. மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் ஜெயமூர்த்தி தலைமை வகித்தார். கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன், மானாமதுரை எம்எல்ஏ தமிழரசி ரவிக்குமார், நகராட்சி தலைவர் மாரியப்பன் கென்னடி சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். தலைமை கழக பேச்சாளர்கள் கவிஞர் சல்மா, மணிமுடி ஆகியோர் மொழிப்போர் தியாகிகளின் வீரவரலாறு குறித்து விளக்கி பேசினர்.

இக்கூட்டத்தில் மானாமதுரை கிழக்கு ஒன்றிய செயலாளர் ராஜாமணி, நகர செயலாளர் பொன்னுச்சாமி, திருப்புவனம் பேரூராட்சி தலைவர் சேங்கை மாறன், மேற்கு ஒன்றிய செயலாளர் அண்ணாத்துரை, ஒன்றியக்குழு துணைத்தலைவர் முத்துச்சாமி, மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை தலைவர் சண்முகநாதன், ஊராட்சிமன்ற தலைவர்கள் மாங்குளம் முருகவள்ளி தேசிங்குராஜன், ேவம்பத்தூர் சமயமுத்து, நகராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை