மொபட் பெட்டியை உடைத்து ரூ.50 ஆயிரம், செல்போன் கொள்ளை

ஆவடி: ஆவடி டேங்க் பேக்டரி சாலையில் பாதுகாப்பு துறை ஊழியரின் மொபட் பெட்டியை உடைத்து ரூ.50 ஆயிரம், செல்போன் கொள்ளையடித்த மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர். திருமுல்லைவாயல், சாந்தி நகர், 8வது தெருவை சேர்ந்தவர் மணி. இவரது மனைவி அனிதா (45). இவர், ஆவடி டேங்க் பேக்டரி ஊழியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், நேற்று மாலை அனிதா, வேலை முடிந்து வீட்டுக்கு மொபட்டில் திரும்பி கொண்டிருந்தார். ஆவடி டேங்க்பேக்டரி சாலையில் மொபட்டை நிறுத்திவிட்டு கடையில் பூ வாங்கிவிட்டு அவர் மீண்டும் மொபட்டை எடுக்க வந்தார். அப்போது, மொபட்டின் சீட்டுக்கு அடியில் உள்ள பெட்டி உடைக்கப்பட்டு திறந்துகிடந்தது. அதிர்ச்சியடைந்த அவர் அதனை திறந்துபார்த்தார். அப்போது, அதில் வைத்திருந்த ரூ.50 ஆயிரம் ரொக்கப்பணம், விலை உயர்ந்த செல்போன் ஆகியவை திருடு போயிருந்தது தெரியவந்தது. இவர் பூக்கடைக்கு சென்றபோது மர்ம நபர் பெட்டியை உடைத்து பணம், செல்போனை கொள்ளையடித்து இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து அனிதா ஆவடி காவல் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ஜெய்கிருஷ்ணன் தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்புகேமரா மூலமாக பணம், செல்போன் ஆகிவற்றை திருடிய மர்மநபரை போலீசார் தேடுகின்றனர்….

Related posts

சொகுசு கார் மோசடி: தவெக நிர்வாகி கைது

உரிய ஆவணம் இல்லாத பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த 3 பேர் கைது

காரைக்குடியில் பிரபல ரவுடி சுரேஷ் கைது