மொபட் திருடிய வாலிபர் கைது

ஈரோடு, ஆக.8: ஈரோடு மாணிக்கம்பாளையம், முனியப்பன் கோவில் வீதியை சேர்ந்தவர் குணசேகரன். இவரது மனைவி ஜோதி (47). இவர் தனது மொபட்டை வீட்டிற்கு முன்பாக நிறுத்திவிட்டு சிறிது நேரத்திற்கு பிறகு வெளியே வந்து பார்த்த போது காணவில்லை. இதையடுத்து ஈரோடு வடக்கு போலீசில் இது குறித்து புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிந்து மொபட் திருடிய ஈரோடு வீரப்பன்சத்திரம், திருமலை வீதியை சேர்ந்த கணேசன் மகன் அழகேசன் (23) என்பவரை கைது செய்தனர்.

Related posts

முன்னாள் ராணுவவீரர் வீட்டில் 15 சவரன் திருட்டு மர்ம ஆசாமிகளுக்கு வலை குடியாத்தத்தில் துணிகரம்

இன்ஸ்டாகிராமில் பழகிய சிறுமிக்காக மல்லுக்கட்டிய 2 வாலிபர்கள் மோதலில் ஈடுபட்ட 10 பேர் மீது வழக்கு ஒடுகத்தூர் அருகே பரபரப்பு

உயர்அழுத்த மின்கம்பி மீது உரசிய ரயில்வே கம்பத்தால் எக்ஸ்பிரஸ் ரயில் நிறுத்தம் பயணிகள் அவதி வேலூரில் லாரி மோதியதால்