மொபட்டில் மதுபாட்டில் விற்றவர் கைது

பண்ருட்டி, செப். 24: கடலூர் மாவட்டம், பண்ருட்டி தாலுகா, காடாம்புலியூர் காவல் நிலைய எஸ்ஐ பிரேம்குமார் மற்றும் போலீசார் தீவிர மது வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். காடாம்புலியூர் அடுத்த மாளிகம்பட்டு பகுதியில் சென்றபோது, மாளிக்கம்பட்டு அம்மன் கோயில் தெரு பெருமாள் மகன் பத்மநாபன் (45) மொபட்டில் அரசு மதுபான பாட்டில்கள் விற்பனை செய்ததை கண்டுபிடித்தனர். இதனையடுத்து அவரிடமிருந்த மதுபாட்டில்கள், விற்ற பணத்தையும், மொபட்டையும் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிந்த போலீசார், பத்மநாபனை கைது செய்தனர்.

Related posts

வார்டு குழு அலுவலக அறிவிப்பு பலகையில் மாநகர சாலையோர வியாபாரிகள் பட்டியல்: மாநகராட்சி கமிஷனர் தகவல்

வௌிநாட்டில் வேலை வாங்கி தருவதாக மோசடி: லட்சக்கணக்கில் பணத்தை இழந்த இளைஞர்கள் கலெக்டரிடம் மனு

மாநகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டம்